பீகார் மற்றும் டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலின் போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த புதிய வருமான வரிமுறையில் 12 லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரியில்லை.
இந்த நிலையில், பீகார் மற்றும் டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஒன்றிய அரசுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் அரசுக்கு திட்டங்களை ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளது என்றும் டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார் .