காவிரி விவகாரம் உள்பட தமிழகத்தில் நிலவில் வரும் பல்வேறு சமூக பிரச்சனைகள் நிலவும் நேரத்தில் தமிழ்நாடு சட்டபேரவை இன்று கூடுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 20-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி நிறைவு பெற்றது. பொதுவாக சட்டப்பேரவை கூட்டம் 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி இம்மாதம் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் சட்டசபையை கூட்ட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது .
சட்ட ஒழுங்கு நிலை, காவேரி விவகாரம், மகளிர் உரிமைத்தொகை, ஆசிரியர்கள் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி சார்பாக பல கேள்விகள் எழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . எது எப்படியோ வழக்கம் போல் இந்த முறையும் சட்டசபையில் காரசார விவாதங்கள் நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.