தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிய சாதியப் பாகுபாட்டினைக் கண்டு கொதித்தெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் . மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகிவற்றுக்காக தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் கண்டார் .
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுத எழுத நினைத்த பல தலைவர்களுள் ஒருவரான தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரை முருகன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.