எண்ணூரில் எண்ணெய் கலப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது . இந்நிலையில் சென்னை எண்ணூர், மணலி பகுதியில் தேங்கிய வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் .
கச்சா என்னை கசிந்துள்ள இப்பகுதிகள் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவதால் இப்பகுதிகளை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என சிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது .
இதையடுத்து எண்ணூரில் தற்போது தேங்கி இருக்கும் வெள்ள நீரில் கலந்த எண்ணெய் கசிவை அகற்ற 75 படகுகள் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 12,500 ரூபாயும் படகுகளுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் எண்ணெய் பாதித்த மீனவ கிராமங்களில் 2300க்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் சுமார் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது .