பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை (Today Onwards) சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
ஒவ்வரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .
கடந்தாண்டு பொங்கலுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மற்றும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் தொகுப்புகள் பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .
அதன்படி, 2024ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என முதலமைச்சர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் நியாய விலைக்கடையில் வழங்கப்பட்டு வருகிறது .
(Today Onwards) இன்று 10ம் தேதி முதல் 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள் 14ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.
இதேபோல் புதுச்சேரியில் அரிசி, வெல்லம் போன்ற பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன் கார்டுகளுக்கு தலா 500 வழங்க அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பி வெளியிட்டது
அதுவும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைவரது வங்கிக் கணக்கிலும் இந்த பணத்தை வரவு வைக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
Also Read : https://itamiltv.com/ops-urges-tngovt-to-end-the-strike-of-govt-transport-workers/
ஏற்கனவே, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், இப்போது, பொங்கல் பண்டிகைக்கு 500 ரூபாய் பணமும் வழங்கப்படுவது, அம்மாநில மக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.