சென்னையில் ஓடும் ரயிலில் தொங்கி சாசகம் செய்த கல்லூரி மாணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த 9ம் தேதி அபிலாஷ் என்ற கல்லூரி மாணவன் ஓடும் மின்சார ரயிலில் படியில் தொங்கி தனது நண்பர்கள் முன் ஆபத்தை உணராமல் சாசகம் செய்துள்ளார் . ஒரு கட்டத்தில் தண்டவாளம் அருகே உள்ள இரும்பு கம்பத்தில் அவர் மோதி கீழே விழுந்துள்ளார் .
இதையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்ட ரயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Also Read : மகாராஷ்டிராவில் பரபரப்பு – முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை..!!
கடந்த 9ம் தேதி நடந்த விபத்து தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் விபத்து குறித்து ராயபுரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
வட மாநிலங்களை தொடர்ந்து சென்னையிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் மக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற அச்சுறுத்தும் சாகசத்தில் இறங்கி உயிரை விடும் அளவிற்கு முகம் சுளிலும் செயலில் ஈடுபடுவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.