நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கம் (two earthquakes) ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் இரவு 11.58 மணிக்கு ஏற்பட்ட நிலையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.
அதனையடுத்து, நள்ளிரவு 1.30 மணியளவில் இரண்டவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது (two earthquakes). இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.
முதலில், இரவு 11.58 மணிக்கு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால், மக்கள் சற்று அச்சம் அடைந்த நிலையில், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தில் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்து வீடுகளை விட்டுவெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
முன்னதாக, நேபாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டது.
இதனால், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உருக்குலைந்தது, நேபாள வரலாற்றில் மிக மோசமன இயற்கை சேதங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலநடுக்கத்தால் 8,694 பேர் பலியாகினர்.
அந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு மக்கள் மனதில் இன்னமும் மறையாமல் இருக்கும் நிலையில், மீண்டும் அதேபோல நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.