மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10.2 லட்சம் வழங்கியுள்ளார்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றுலா பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
வரலாறு காணாத இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திரை பிரபலங்கள் பலர் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது அரசியல் தலைவர்களும் அவர்களை முடிந்த தொகையினை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத சம்பளம் மற்றும் கட்சி நிதியை சேர்த்து ரூ.10.2 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார்.