வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
படுக்கை வசதியுடன் அறிமுகமாகும் வந்தே பாரத் ரயிலின் வசதிகள் :
800 முதல் 1,200 கி.மீ., தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
16 பெட்டிகள் இருக்கும். அதில் ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகள்,
இரண்டு அடுக்கு படுக்கை வசதிகொண்ட நான்கு பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டி 1 உடன் 823 பேர் பயணிக்க முடியும்.
மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.
Also Read : பாஸ்போர்ட் இணையதள சேவை சீரானது..!!
மொபைல் போன் சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்காக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஆகியவை இடம்பெறும்.
முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிகள் சுடு தண்ணீரில் குளிக்கும் வசதி உள்ளது.
ஏற்கனவே நாட்டின் அனைத்து இடங்களிலும் வந்தே பாரத் ரயில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது படுக்கை வசதியுடன் அறிமுகமாகும் வந்தே பாரத் ரயில்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.