அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை சூறையாடிய மிக்ஜாம் புயலால் தற்போது சென்னை மாநகரமே நீருக்குள் மூழ்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் துரிதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த புயல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது :
அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.
2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, ‘#CycloneMichaung’ இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.
முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம்.
மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.
இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும்
கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்
இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!
அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.
வெல்லட்டும் மானுடம்! என தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.