மேற்கு வங்காளத்தில், பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் (lunch) பெரிய பாம்பு ஒன்று கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் உள்ள பீர்பும் மாவட்டத்தில் மயூரேஸ்வர் பகுதியில் உள்ள முதன்மை நிலை பள்ளி ஒன்றில் படித்து வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு (lunch) வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதனை சாப்பிட்ட மாணவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளனர். மேலும், தொடர்ந்து 30 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பெரிய பாம்பு ஒன்று கிடந்ததும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், மருத்துவமனையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின்னர், அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், தற்போது ஒரேயொரு மாணவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரும் நலமுடனேயே உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் பற்றி அறிந்தது, பள்ளிக்கு நேரில் சென்ற பெற்றோர் தலைமை ஆசிரியரின் இரு சக்கர வாகனம் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.