சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சியின் விலை தரத்தை பொறுத்து, ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தமிழ் நாட்டில் முக்கியமான காய்கறி சந்தைகளில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முக்கியமானது. இந்த சந்தைகளில் இருந்து போரூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரங்கள் குறித்து பார்க்கலாம்.
அதன்படி குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 34 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய் என விற்பனையாகிறது.
அதே போல் கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ அறுபது ரூபாய், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இஞ்சியின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்திலேயே காணப்பட்டு வருகிறது. அதன்படி தரத்தை பொறுத்து ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதே போல் கடந்த சிலமாதங்களாக கடும் உச்சத்தில் இருந்த தக்காளி படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கிலோவிற்கு 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.