கீழடி அகழாய்வை கைவிட்டு ASI வெளியேறியது ஏன் என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முடியுமா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-766.png?resize=670%2C503&ssl=1)
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் கூறிருப்பதாவது :
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி. ஆனால் இதே ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை தாங்கள் கூற முடியுமா?
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-765.png?resize=670%2C503&ssl=1)
இதே ASI கீழடி பற்றிய அமர்நாத் இராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை இன்று வரை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று தாங்கள் கூற முடியுமா? இதே ASI இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை எழுத தீர்மானித்த குழுவில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒருவரை கூட இடம்பெறச்செய்யாதது ஏன் என தாங்கள் கூற முடியுமா? என சரமாரியான கேள்விகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சு.வெங்கடேசன் முன்வைத்துள்ளார்.