பல குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் என்கவுன்டருக்கான காரணம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ரவுடி சம்போ செந்திலின், எதிராளி தான் காக்கா தோப்பு பாலாஜி .
காக்கா தோப்பு பாலாஜி 5 கொலை வழக்குகள் உள்பட 59 குற்றவழக்குகளில் தொடர்புடைய சரித்திரபதிவேடு குற்றவாளி என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது .
இந்நிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்வதற்காக கொடுங்கையூர் போலீஸார் வியாசர்பாடி P&T குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு காக்கா தோப்பு பாலாஜி தப்பியோட முயன்றதால், தற்காப்புக்காக போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் .
போலீசார் சுட்டதில் சுருண்டு விழுந்த பாலாஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற போது வழியில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் . இதையடுத்து என்கவுன்டரில் உயிரிழந்த பாலாஜியின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்வதற்கான காரணம் குறித்து காவல்துறை தற்போது விளக்கமளித்துள்ளது.
சென்னையில் இன்று போலீசார் வழக்கமான வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருப்பித்தபோது ஒரு கார் போலீசாரின் தடுப்பை மீறி சென்றுள்ளது . இதையடுத்து அந்த காரை சேஸ் செய்த போலீசார் காரை தடுத்து நிறுத்தியபோது அந்த காரில் இருந்தது நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த வுடி காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது.
இதையடுத்து பாலாஜிடம் சரணடையும்படி போலீசார் கூற தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல் ஆய்வாளர் சரணவனை நோக்கி பாலாஜி சுட்டுள்ளார்.
இதையடுத்து தற்காத்துக்கொள்ள காவல் ஆய்வாளர் சரவணன் திருப்பி சுட்டுள்ளார் இதில் துப்பாக்கி குண்டு பாலாஜினி மார்பகத்தை தாக்க அவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் பாலாஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற போது வழியில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக என வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.