இளைஞர்கள் குறிப்பாக முதல் முறை வாக்களிப்பவர்கள் ஆர்வத்தோடு வாக்களிக்க முன்வர வேண்டும் என (mkstalin) தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொது மக்கள் திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்த வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்கு செலுத்தினார்.
Also Read : உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்.
அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்.
நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் (mkstalin) கையில் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.