ஜிம்பாப்வேவில் தற்போது கடும் பஞ்சம் நிலவி வரும் நிலையில் உணவுக்காக யானைகளை கொலை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல கோடி உயிரினங்கள் வாழும் பூமியின் ஒரு பகுதி செழுமையாக அழகாக இருந்து வரும் நிலையில் அப்படியே மறுபக்கம் பசி பஞ்சம் வறட்சி உள்ளிட்ட கொடுமைகளால் மக்கள் தினம் தினம் செத்துமடியும் துயர சம்பவம் நாம் வாழும் இன்றைய காலத்தில் நிகழ்ந்த்து வருவது மனதை உருக்குகிறது.
அந்தவகையில் ஜிம்பாப்வே நாட்டில் கடுமையான பஞ்சத்தால் மக்கள் அவதி பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : நடிகர் தர்ஷன் இருந்த பெங்களூரு சிறையில் 5 கத்திகள், 15 செல்போன்கள் பறிமுதல்..!!
ஜிம்பாப்வேயில் நிலவி வரும் இந்த வறட்சியால் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 200 யானைகளை வேட்டையாட அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவற்றை கொன்று ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது .
ஏற்கனவே கடும் பஞ்சம் காரணமாக நமீபியா நாட்டில் யானைகள் கொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜிம்பாப்வேவும் யானைகளை கொல்லும் திட்டத்தில் இறங்கி உள்ளது இதற்குமுன் 1988ம் ஆண்டு ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் யானைகள் வேட்டையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.