தஞ்சை மாதாக்கோட்டை-யில் விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு.. சீறிப் பாயும் காளைகளை பாய்ந்து புடிக்கும் வீரர்கள்..
தஞ்சை மாதா கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை அடுத்த மாதாகோட்டையில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக் கோட்டை லூர்து மாதா ஆலய தெருவில் இன்று காலை தொடங்கியுள்ளது .
இந்த விழாவில் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ சுமார் 600 காளைகள் வர வழைக்கப்பட்டுள்ளன.
350 மாடுபிடி வீரர்களும் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை காட்டுகின்றன. இவர்களை சுகாதாரத் துறை அலுவலர்கள் உடல் பரிசோதனை செய்து, தகுதியான நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி வருகின்றனர்.
இவற்றை கால்நடை மருத்துவர்கள் ஒவ்வொன்றாகப் பரிசோதித்த பின்னரே அனுமதி வழங்கி வருகின்றனர்.
காளைகளையும், வீரர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே களத்துக்குள் அனுமதிக்கின்றன .
காளைகள் திறந்துவிடப்படும் வாடி வாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருக்கின்றது.
அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாதபடி தடுக்க இரும்பு கம்பிகளாலும், சவுக்கு கட்டைகளாலும் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் உள்ளது.