கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மேற்கத்திய இசை வடிவில் பாடப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக நேற்று மாலை சென்னை வந்த மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் பாட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தாது.
இதையும் படியுங்க : world tallest அம்பேத்கர் சிலை – திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர்!
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் மேற்கத்திய இசை வடிவில் 90 வினாடிகள் பாடப்பட்டது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள X பதிவில்,
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக திமுக அரசு அறிவித்தது.
மேலும் இந்த பாடலை 55 வினாடிகளில், முல்லைப்பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.
ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடப்பட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.
விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது திமுகவின் வழக்கமாகியிருக்கிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்க திமுக செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.