தரக்குறைவான பேச்சு : அண்மையில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியை சுட்டிக்காட்டி, அந்நிகழ்ச்சியின் நெறியாளர் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.
அதில், “பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க” என்பது போல நெறியாளர் அமைச்சர் உதயநிதியிடம் கேள்விகளை கேட்டதாக குறிப்பிட்டு விமர்சித்தார்.
அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினரும்,
துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க : சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கிடுக – டிடிவி!!
அதில், பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும்,
தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
“ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை.
உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும் தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது.
இதையும் படிங்க : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ வெளியிட்டவர் கைது!
அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை.
எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்” எனத் தெரிவித்துள்ளார்.