கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை இழிவுபடுத்தி பேசியுள்ள குஷ்புவிற்கு ஒரு கோடியே 16 இலட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சேத்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது :
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை இழிவுபடுத்தி பேசியுள்ளார் குஷ்பு. தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் தெரியாமல் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
குஷ்புவின் வாழ்க்கை முறை என்னவென்று நமக்குத் தெரியும். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை. நிச்சயமாக ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரிய வாய்ப்பில்லை.
பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று அந்த அம்மா சொல்கிறார், 1989இல் சொத்துரிமை, கல்வி உரிமை கொடுத்து பொருளாதார சுதந்திரம் அளித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
அதனை எதிர்த்து பேச இந்தியாவில் ஒருத்தரும் கிடையாது. அதன் பிறகு தான் (geetha jeevan) இந்திய அளவில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கான உரிமைக்கு அடித்தளமிட்டது திமுக.
Also Read : https://itamiltv.com/tn-floating-on-drugs-rn-ravi-request-to-youth/
எந்த மாநிலமும் இந்திய அளவில் அளிக்காத பொருளாதார சுதந்திரத்தை பெண்களுக்கு கொடுத்தது திமுக. மகளிர் உரிமைத்தொகையான ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நிலை அறியாமல், பெண்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள், எந்த அளவிற்கு இந்த பணம் உபயோகப்படுகிறது என தெரியாமல் பேசி இருக்கிறார் குஷ்பு.
குஷ்புவின் இந்த பேச்சுக்கு ஒரு கோடியே 16 இலட்சம் பெண்கள் (geetha jeevan) பதிலளிப்பார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.