வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு ( alert message ) கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது
வரும் 23ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது
Also Read : பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம் – அமெரிக்காவில் நடந்த வினோத நிகழ்வு..!!
குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்ட மக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும், முடிந்தால் வருவதை தவிர்க்கலாம் என்றும்
அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குமரி, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில், 10 பேரிடர் மீட்பு குழுக்கள் ( alert message ) நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.