தமிழக கடலோர மாவட்டங்களில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் (today and tomorrow) லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் (today and tomorrow) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் மேலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேலும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 1 செ.மீட்டர் மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.