நாகப்பட்டினத்தில், சாம்பாரில் பூரான் விழுந்த உணவு சாப்பிட்ட 30 செவிலியர்(30 nurses) நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
நாகப்பட்டினம்(nagai) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தமிழகம் முழுவதுமிருந்து 287 மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் கொடுக்கப்பட்டது.உணவினை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதுள்ளது. உடனடியாக இந்த மாணவிகளை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த சாம்பாரை சோதித்து பார்க்கும் பொழுது அந்த சாம்பாரில் பூரான் விழுந்து செத்து கிடந்துள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக தான் இந்த உணவினை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாகப்பட்டினத்தில், சாம்பாரில் பூரான் விழுந்த உணவு சாப்பிட்ட 30 செவிலியர் நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், சிகிச்சைக்கு வந்த 30 மாணவிகளில் இருவருக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டது என்றும் மற்ற 28 மாணவிகள் பூரான் கிடந்த உணவை சாப்பிடவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் முதலுதவி சிகிச்சைக்கு பின் 30, மாணவிகளும் செவிலியர் பயிற்சி பள்ளிக்கு திரும்பியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டா