உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ( hearing loss ) ஆய்வறிக்கை மூலம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது
இதுபோன்ற செவித்திறன் உள்ளவர்களில் 20 சதவீதத்தினரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளதாகவும்
2050ல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது
ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100 கோடி இளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது.
Also Read : சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்
இந்த நவீன கால உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் ஹெட்போன்கள் உள்ளது . இதில் சரியான முறையில் கேட்க தக்க தேவையான அளவில் இந்த ஹெட்போன்களை உபயோகிக்கின்றனர்.
அப்படியே இந்த பக்கம் இந்த ஹெட்போன்களை கண்டபடி உபயோகித்து தங்களது செவி திறனை தானே இழக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் ( hearing loss ) அறிந்தால் இனி இதுபோன்ற செயல்களை செய்யமாட்டார்கள் என்றும் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஹெட்போன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.