கேரளாவில் பெற்ற மகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவை 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில்இந்த சிறுமி உடன் படிக்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த மாணவனுடன் பேசி பழகி வந்துள்ளார்.
இஹனை அறிந்த சிறுமியின் தந்தை அவரை கண்டித்தார். ஆனாலும் சிறுமி அதனை கண்டு கொள்ளாமல் அந்த மாணவனுடன், ‘மொபைல் போனில் பேசி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, கடந்த மாதம் 29ம் தேதி பெற்ற மகள் என்றும் பார்க்காமல் இரும்புக்கம்பியால் அடித்து கட்டாயப்படுத்தி பூச்சி மருந்து கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அச்சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-377.png?resize=650%2C400&ssl=1)
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மாற்று மதத்தைச் சேர்ந்த மாணவனுடன் பழகியதால் பெற்ற மகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.