குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்கள் ( drug house ) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் BAD எனும் ஆங்கிலத் தொடரைப் போல, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இயங்கி வந்த ரகசிய போதைப்பொருள் தயாரிப்பு கூடங்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்று கண்டுபிடித்துள்ளது.
இந்த கூடங்களில் சுமார் ₹300 கோடி மதிப்பிலான ‘மியாவ் மியாவ்’ எனப்படும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி சம்பவ இடத்தில் 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன.
குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இந்த சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக 7 பேர் தற்போது கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்
இது நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் எனவும் போலீசாரால் ( drug house ) உறுதி செய்யப்பட்டுள்ளது .