கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றை மறந்து தற்போது தான் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்களது அன்றாட வேலைகளை செய்து வரும் நிலையில் அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை அதிரவைக்க ஆரம்பித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் இந்த நோய் தொற்று பரவி இருக்கிறது.
அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை தொற்று குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் . ஜெர்மனியில் தான் இந்த தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டர் ஏன்? – காவல்துறை விளக்கம்..
உலகின் மற்ற நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும். புதிய வகை கொரோனா தொற்றின் தன்மையை, செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர் .
இந்தியாவில் தற்போது வரை இந்த புதிய வகை தொற்று பரவவில்லை என்றும் வெளிநாடு பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.