ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை ஈசிஆர் ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நேற்று நடைபெற்றது. இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணகானக ரசிகர்கள் வந்திருந்தனர். ஆனால்,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும் ரசிகர்கள் குற்ற்றசாட்டினர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ள ரசிகர்கள், “3 மணிக்கு கேட் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் 4 மணிக்கு மேல் ஆகியும் கேட் திறக்கப்படவில்லை” என்றும்,
கடுமையான ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்கே பல மணி நேரம் பிடித்ததாகவும், ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த இடங்களை பலர் ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.
மேலும் டிக்கெட் இருந்த பலரை இடமில்லை என்று கூறி உள்ளே அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தனர் . இதனால் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் வீடு திரும்பியுள்ளனர்.