ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டு அதற்கு மாறாக “ஆவின் டிலைட்” என்ற பெயரில் ஊதா (Violet) நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும், இதன் விலை ஆரஞ்சு நிற பாக்கெட்டை விட 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் பாக்கெட்டானது பச்சை, ஆரஞ்ச், ஊதா என பல்வேறு நிறங்களில் கொழுப்பு சத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் திருநெல்வேலி ஆவின் நிறுவனம் சார்பாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நமது ஒன்றியம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் பசும்பாலின் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள்
புதன் கிழமை (15.11.2023) முதல் நிறுத்தம் செய்யப்பட்டு வியாழக்கிழமை (16.11.2023) முதல் ஆவின் டிலைட் என்னும் பெயரில் ஊதா நிற பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆவின் டிலைட் 200 மிலி பாக்கெட் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டு 200 மிலி பாக்கெட் பால் முகவர்களுக்கு 9.66 ரூபாய்க்கும், விற்பனை விலை 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவின் முகவர்கள் மேற்கண்ட விலையின் அடிப்படையில் வங்கியில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மண்டல பொறுப்பாளர்கள் மேற்கண்ட விலையில் பணம் வசூல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை விட ஆவின் டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் 50 காசுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.