நடிகர் விஷால் (Actor Vishal) வெளியிட்டுள்ள அறிக்கை அவரின் அரசியல் வருகை குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் தொடங்கி கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அரசியலுக்கு வரும் சினிமா பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வரிசையில் நடிகர் விஜய் அண்மையில் அரசியலில் இணைந்து கொண்டார்.
தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் , முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், 2026-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
விஜய் அரசியல் அறிவிப்பு குறித்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், தற்போது நடிகர் விஷாலும் (Actor Vishal) அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஷால் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணினேன்.
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.
அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன்,
என் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம்.
https://x.com/ITamilTVNews/status/1755111199874875584?s=20
பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.
அது மட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை.
நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக் கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.
இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.
வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போதும் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
“இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளது
அரசியலுக்கு வரப்போவதை அவர் சூசகமாக கூறியுள்ளாரா என பேசப்பட்டு வருகிறது.