admk logo case –அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரத்தில், எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக புகழேந்தி தாக்கல் செய்த மனுவினை டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். அவர், அதிமுகவின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடைகிறதா ஓபிஎஸ் அணி! வில்லங்கமாகும் ரவிந்திரநாத்..
பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதால் சட்டரீதியாகவும் கட்சி, சின்னம் ஆகியவை அவரிடம் சென்றுள்ளது.
ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அணையத்திற்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு (admk logo case) தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் இந்த வழக்கை பிரதிநிதிப் படுத்தவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.