தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமித் ஷா இன்று பாஜக நிர்வாகிகளுடன் பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதையடுத்து நடைபெற்ற பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனுத் தாக்கலின்போது, நயினார் நாகேந்திரன் மட்டுமே தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள் – திடீரென வருத்தம் தெரிவித்து துரைமுருகன்..!!
இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கூட்டத்தில் அண்ணாமலை , நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா தமிழ்நாட்டில் “அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது” எனத் தெரிவித்தார்.
யாருக்கு எத்தனை தொகுதி, வெற்றிபெற்ற பின் எப்படி ஆட்சியமைப்பது என்பது பின்னர் விவாதிக்கப்படும். அதிமுக எந்த நிபந்தனையும் இதுவரை வைக்கவில்லை. 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான். தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.