ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் நவம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. முன்னதாக ஜூலையில், அந்நிறுவனம் போஸ்ட்பெய்டு திட்டத்தின் விலையை அதிகரித்ததோடு ரூ.49 திட்டத்தை நீக்கியது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/11/1587558944zzz838.jpg?resize=800%2C450&ssl=1)
இந்நிலையில் தற்போது ஏர்டெல்லின் 28 நாள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.99 முதல் தொடங்கும் வகையில் 25% அதிகரித்துள்ளது. அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆகவும், 28 நாட்கள் 2G B மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.