நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை சேரிங்கிராஸில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கமர்சியல் சாலை வழியாக அப்பர் பஜார், மெயின் பஜார், பேருந்து நிலையம், லோயர் பஜார் வழியாக ஏடிசி சுதந்திர திடலில் முடித்தார். அங்கு நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-1108.png?resize=1024%2C683&ssl=1)
தமிழகத்திலேயே அதிக பிரச்சினைகள் இருக்கக்கூடிய சட்டமன்றத் தொகுதி கூடலூர். பாராளுமன்றத் தொகுதி நீலகிரி. தமிழ், மலையாளம், கன்னடம், உருது என எல்லா மொழிகளும் பேசப்படும் பகுதி. திமுக அரசு எந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை.
முதுமலை வனவிலங்கு காப்பகம், கூடலூர் தொகுதியில் தான் உள்ளது. தமிழகத்தின் மாநில விலங்கு எது என்று கேட்டால் அது நம் மாநிலத்தில் பலருக்கு தெரியாது. நீலகிரி மாவட்டத்தின் வரையாடு தான் தமிழகத்தின் மாநில விலங்கு. இந்த உயிரினம் இன்று அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-1109.png?resize=1024%2C683&ssl=1)
இது தான் இத்தனை ஆண்டுகளாக நம் மாநில விலங்கை நாம் பாதுகாத்த லட்சணம். தற்போதுதான் வரையாடுகளை காக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. கடந்த 40 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் இறந்துவிட்டன. இதை விசாரிக்க நேற்று மத்திய புலிகள் காக்கும் இயக்கத்திலிருந்து அதிகாரிகள் நீலகிரி வந்துள்ளார்கள்.
தமிழின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை எப்போதும் மறைத்து தங்கள் குடும்ப பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம்.
சமீபத்தில் நிறைவேறிய G20 மாநாட்டில் பங்குபெற்ற உலகத்தலைவர்களுக்கு ஒரு பரிசு பெட்டகத்தை நமது பாரத பிரதமர் வழங்கினார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-1110.png?resize=1024%2C683&ssl=1)
அந்த பரிசு பெட்டகத்தில் நீலகிரி தேயிலையும் இடம்பெற்றது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்து செல்ல ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டார். தமிழக கலாச்சாரத்தைப் பாதுகாக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் இயற்கை தமிழகத்திற்கு வழங்கிய கொடை. அதை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. திமுக, இயற்கையைப் பாதுகாக்காது.
வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் இருந்து 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்துபவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான வளர்ச்சியைப் பெற, மக்கள் தேவைகளைக் கேட்டுப் பெற, மத்தியிலும் நமது தொகுதியிலும் பாஜகவுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.