பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் பற்றி யாராவது தவறாகப் பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss)கண்டனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
பெரியார் சிலை குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு குறித்த கேள்விக்கு,இது தந்தை பெரியார் மண் என்று தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடையாது என்று தெரிவித்த அவர், இது போன்று பெரியாரை இழிவுபடுத்தி பேசுவது தவறு என்று தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அளவில் சமூக நீதியை பெற்று தந்தவர் பெரியார்.தந்தை பெரியாரை பற்றி பாஜக தலைவர் அண்ணாமலையே அவர்களை சேர்ந்தவர்களோ இழிவாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களை பாமக பின்பற்றி வருகிறது.இவர்களை பற்றி யாராவது தவறாகப் பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
,