விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னீயூர் சிவா ( Anneyur Siva ) போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஏப்ரல் 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .
Also Read : தமிழக அரசின் திட்டங்களை அறிய ‘வாட்ஸ்ஆப்’ சேனல் அறிமுகம்..!!
இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது .
அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் ,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னீயூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதேபோல் மறுபக்கம் மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி முதல் முறையாக ( Anneyur Siva ) தேர்தலில் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.