இசைப் புயல் A.R. ரஹ்மானின் 30 ஆண்டுகளை பல்வேறு விதங்களில் கொண்டாடி வரும் ரசிகர்களுக்காக கடந்தஆகஸ்ட் 12ம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் இந்த நேரலை இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜோனிதா காந்தி, ஷக்தி ஸ்ரீகோபாலன் உள்ளிட்டப் பாடகர்கள் கலந்துகொள்ள இருந்தார்கள்.
இந்நிலையில், ரஹ்மானின் இசையை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சென்னையில் தொடர்மழை பெய்து வந்தது.
சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் பேலேஸில் நடைபெற இருந்த இந்த கான்சர்ட் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்ட ஏஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெடுகளை பயன்படுத்தி கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.