தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள்(chennai metro) இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து chennai metro நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, இன்று (11.08.2023) மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, மெட்ரோ இரயில் பயணிகள் நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (11.08.2023)மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.