Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home தமிழகம்

ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு: தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை? அரசுக்கு 6 கேள்விகள்!

by devagi
July 9, 2024
in தமிழகம்
0
ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு: தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை? அரசுக்கு 6 கேள்விகள்!

Armstrong case

Armstrong case : தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகள் மக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது .

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் “கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷை கொலை செய்ததற்குப் பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை நிகழ்ந்திருக்கிறது. ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று இந்த கொலை சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ஆம்ஸ்ட்ராங் எங்கே செல்கிறார் என்ன செய்கிறார் என்று நோட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பாக ஐந்து முறை முயற்சி செய்து 6வது முறை முயற்சியில் இந்த கொலை நடந்தது தெரியவந்திருக்கிறது.

இந்த கொலை சம்பவம் நடைபெற்ற ஒருசில மணிநேரத்திலேயே குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டதாகச் காவல்துறை சொன்ன நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதேபோல, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லியிருந்தார்.

இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை தரப்பில், `ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை’ என விளக்கமளித்திருக்கிறது. உளவுத்துறை தரப்பிலிருந்து முன்பே 3 முறை எச்சரிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், “உளவுத்துறையிலிருந்து எந்த தகவலும் வரவில்லை” என்று முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சொல்லியிருந்தார். இந்நிலையில் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பா தன் எக்ஸ் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.. அதில் (Armstrong case),

  1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
  2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
  3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
  4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
  5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?
  6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, என மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன? எனக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

ஒருபுறம் அரசு மற்றும் காவல்துறை தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பா.ரஞ்சித் போன்றோரின் இத்தகைய கேள்விகள் சமூகத்தில் பேசுபொருளாகி உள்ளன.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: 6 questions for the governmentArmstrong caseஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு
Previous Post

மருங்கூர் அகழாய்வில் பழங்கால வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு..!!

Next Post

தொடரும் அழுகுரல்கள் : உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா கொடூர தாக்குதல்..!!

Related Posts

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

May 9, 2025
BJP vs admk
அரசியல்

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
karnataka
தமிழகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025
AIADMK ques
அரசியல்

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

April 29, 2025
government officials
தமிழகம்

சொன்னதை செய்யாத அரசு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்..!!

April 28, 2025
government employees
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் மெசேஜ் – 110 விதியின்கீழ் 9 முக்கிய அறிவிப்புகள்

April 28, 2025
Next Post
Ukraine children's hospital

தொடரும் அழுகுரல்கள் : உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா கொடூர தாக்குதல்..!!

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com