சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம்-மில் பணம் நிரப்ப வந்த வண்டியில் இருந்து சுமார் ₹38 லட்சத்தை திருடிச் ( ATM money ) சென்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை ஊரப்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை லோடு செய்து கொண்டிருந்தபோது பாதுகாவலர் ஞானசேகரன் என்பவர் வேனில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளார் .
Also Read : 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!
இதையடுத்து உடன் சென்றவர்கள் இதுகுறித்து பாதுகாப்பு நிறுவன மேலாளர் அரவிந்தனிடம் தெரிவிக்க அரவிந்தன் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஞானசேகரனை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர் . அப்போது குணசேகரன் திருடிய பணத்தோடு திருவான்மியூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க உடனே ( ATM money ) திருவான்மியூர்க்கு சென்ற போலீசார் ஞானசேகரனை கைது செய்து அவரிடம் இருந்த 38 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.