டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி (Corporation election )கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலால் ஒரு கவுன்சிலர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியைக் கைப்பற்றியது .இந்த நிலையில் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களாகியும் மாநகரத்தந்தையைத் தேர்வு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
துணைநிலை ஆளுநர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இறுதியாகப் பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷல்லி ஓப் ராய் வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து நிலைக்குழு தலைவர்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் ஆம் ஆத்தியின் செல்வாக்கு அதிகம் இருந்ததால் பாஜக உறுப்பினர்கள் தேர்தலை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் நிலைகுழு தேர்தல் மோசமடைய துவங்கியதால் இரு கட்சி உறுப்பினர்களும் சபையின் மையப் பகுதியில் தாக்கிக் கொண்ட சமூக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் உறுப்பினர்களும் தங்களது தலைவர் முடியைப் பிடித்துக் கொண்டு தாக்கிக் கொண்டனர் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் உறுப்பினர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து டெல்லி மாநகரத்தந்தை ஷல்லி ஓப் ராய் பாஜகவினரின் கோரிக்கையை ஏற்று நிலைக்குழு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மேடைக்கு வந்து என்னைத் தாக்கினர் மேலும் பெண் காவலர் என்னைப் பாதுகாத்தார்.
இதனை தொடர்ந்து பாஜகவினர் ஆம் ஆத்மியின் பெண் உறுப்பினர்களையும் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி மாநகராட்சியின் நிலைக்குழு உறுப்பினர்களின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.