பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்(Vanathi Srinivasan) கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை திரும்பினார்.
அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.