பெண்களை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்விட்டிற்கு காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில்,செய்தியாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்சூர் அலிகான் பேசிய பேச்சுக்கு திரை பிரபலங்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில்பாஜக நிர்வாகியும்,தேசிய மகளிர் ஆண்னைய உறுப்பினருமான குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்து மன்சூர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை டேக் செய்து திமுக நிர்வாகி ஒருவர் ,மணிப்பூரில் பெண்கள் அம்மணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பூ மகளிர் ஆணையம் திரிசாவுக்காக எழுந்து வந்திருக்கிறது.இதை வச்சாவது தாமரைக்கு ரெண்டு ஓட்டு தேறுமா ங்கிற நப்பாசையில் மற்றபடி மகளிர் நலனெல்லாம் அந்த கட்சியில மயிரு நலன் தடவுவதற்கே கூட்டம் போடுற சங்கிகள் என்று கட்டமாக பதிவிட்டு இருந்தார்.
இதற்கு நடிகை குஷ்பு, ‘ இதுதான் திமுகவினருக்கு சொல்லி கொடுக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்க, மன்னிக்கவும் உங்களது ”சேரி” மொழியில் பேச முடியாது. உங்களைப் போன்ற முட்டாள்கள் சுற்றி இருப்பது உங்கள் தலைவருக்கு தான் அவமானம்.
மு.க.ஸ்டாலின் உங்களை அழிக்க வெளியில் இருக்கும் முட்டாள்கள் கூட்டம் தான் இவர்கள் ஜாக்கிரதை’ என முதல்வர் ஸ்டாலினையும் டேக் செய்து கூறியுள்ளார். இதில் குஷ்பு பயன்படுத்தியுள்ள சேரி மொழி என்ற வார்த்தை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்குதான் நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.
https://x.com/Gayatri_Raguram/status/1727334052384911764?s=20
அந்த ட்வீட்டில், ‘இதைச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்யமாட்டேன். அவர்களின் உணர்வை அறியாமல் சேரி என்பதை பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன்.
சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன். என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன். இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். ’சேரி மொழி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.