பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் (Miller In Prime) ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குளோபல் ஸ்டார் தனுஷ் மற்றும் மெழுகு டால் பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கேப்டன் மில்லர் .
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் ஜனவரி 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகனுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் மாஸாக தயாராகி உள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடியது .
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் மேக்கிங் விடீயோக்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில் படமும் நல்ல வரவேற்பை பெற்றது .
நடிகர் தனுஷ் தற்போது கையில் எடுக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி வரும் நிலையில் கேப்டன் மில்லர் படமும் அவரது சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக உருவெடுத்து உள்ளது .
அதேபோல் கேப்டன் மில்லர் படத்துடன் மேலும் சில படங்கள் அதே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் கேப்டன் மில்லர் தான் நம்பர் 1 இல் இருப்பதாக கூறப்படுகிறது .
இந்நிலையில், திரையரங்கில் தாறுமாறான வரவேற்பை பெற்று வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் வசூலிலும் பட்டய கிளப்பியதாக கூறப்படுகிறது.
இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 96 கோடி வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுநாள் நாள் வரை திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வந்த இப்படம் விரைவில் ஓடிடியில் (Miller In Prime) வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் வரும் பிப் 9 ஆம் தேதி பிரபல OTT தலமான அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.