தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 30ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மழைபெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழையை தொடர்ந்து மழை படிப்படியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் டிசம்பர் 27ம் தேதி வரை மிதமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகாவும் வானிலையில் மையம் தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் 27.12.2023 வரை மிதமான மழை!
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 27.12.2023 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல் 28.12.2023, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.12.2023 முதல் 31.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.
30ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 30ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவான வடகிழக்கு காற்றின் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.