குண்டக்கல் மற்றும் விஜயவாடா கோட்டத்தில் ரயில்வே பொறியியல் பணி நடைபெற உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் – பித்ரகுண்டா இடையே 5 நாட்களுக்கு விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்..
சென்னை சென்ட்ரல் – பித்ரகுண்டாவுக்கு நவ. 20-ம் தேதி முதல் நவ.24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (17238), பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்(17237) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
இதுபோல, காட்பாடி- திருப்பதிக்கு நவ.20-ம் தேதி முதல் நவ. 26-ம் தேதி வரை இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் சிறப்பு ரயில், திருப்பதி-காட்பாடிக்கு அதே நாட்களில் காலை 6.50 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட உள்ளன. இதுதவிர 18 ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
வாராந்திர விரைவு ரயில் ரத்து: மத்திய மேற்கு ரயில்வேயில் பொறியியல் பணி காரணமாக, சில ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல்- ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ராவுக்கு டிச. 8, 9-ம் தேதி புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (16031), ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா – சென்னை சென்ட்ரலுக்கு டிச.8, 9 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16032), சென்னை சென்ட்ரல் – லக்னோவுக்கு டிச. 5-ம் தேதி புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (16093), லக்னோ – சென்னை சென்ட்ரலுக்கு டிச. 7-ம் தேதி புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (16094) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.