தமிழ்நாட்டில் பல தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த சிகாகோ விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார்.
அமெரிக்காவில் தங்கி ஒரு பக்கம் முதலீடுகளை ஈர்த்தும் மறுபக்கம் தமிழகத்தில் நடப்பதையும் மற்ற அலுவலக பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வந்தார்.
Also Read : சூடு பிடிக்கும் மகாவிஷ்ணு விவகாரம் – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 7156 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியாகி உள்ளதாகவும் இனி வரும் காலத்தில் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.