தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருவதால் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற இருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டும் சில நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்ட வருகின்றன.
அந்தவகையில் தற்போது சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக “அட்வென்ட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ” ரத்து செய்ய தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முடிவு செய்துள்ளது.

கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 21.12.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த “அட்வென்ட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை” ரத்து செய்ய தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முடிவு செய்துள்ளது என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.