தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பில் ரசிகர்களை கட்டி இழுத்தவர் நடிகர் ரகுவரன்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-214.png?resize=718%2C537&ssl=1)
சினிமா கல்லூரியில் படித்த ரகுவரன், படவாய்ப்புக்காக தேடி அலைந்தார்.நீண்ட போராட்டத்திற்கு பிறகு ‘ஏழாம் மனிதன்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-209.png?resize=600%2C338&ssl=1)
நடிகர் ரகுவரன் நடித்த முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-210.png?resize=320%2C467&ssl=1)
ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்த ரகுவரனுக்கு அடுத்தடுத்து படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வர தொடங்கியது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-211.png?resize=799%2C400&ssl=1)
பொதுவாக தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே கட்டுக்கோப்பான உடல், மிரட்டும் தோரணை,கர்ஜிக்கும் குரல் ,கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவரே வில்லன் என்ற வரையறை வைக்கப்பட்டிருந்ததது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-212.png?resize=718%2C537&ssl=1)
ஆனால் குழி விழுந்த கன்னம், அளவுக்கு அதிகமான உயரம், ஒல்லியான தேகம், மீசையில்லா முகம் என வில்லனுக்கு என தமிழ் சினிமா ஃபார்முலாவை உடைத்தவர் நடிகர் ரகுவரன்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-207.png?resize=1024%2C576&ssl=1)
‘பாட்ஷா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நடிகர் ரகுவரன், மார்க் ஆண்டனி காதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-205.png?resize=700%2C501&ssl=1)
இன்றளவிலும் அந்த கதாபாத்திரத்தை ரகுவரனை தவிர நிச்சயம் யாராலும் ஈடுசெய்ய முடியாது.இதனை தொடர்ந்து , நடிகர் ரகுவரன் முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் மிரட்டும் வில்லனாக நடித்திருந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-206.png?resize=1024%2C576&ssl=1)
தமிழ் சினிமாவில் டாப் வில்லன் நடிகராக வளம் வந்த ரகுவரன் 1996 ஆண்டு நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-213.png?resize=412%2C380&ssl=1)
ரகுவரன்- ரோகிணிக்கு 1998 ஆம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகன் பிறந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-202.png?resize=600%2C400&ssl=1)
இதனை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக நடிகை ரோகிணியை நடிகர் ரகுவரன் பிரிந்தனர். மகன் ரிஷியுடன் ரோஹினி வசித்து வந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-204.png?resize=1024%2C768&ssl=1)
மகனை விட்டு இருந்த அந்த பிரிவு ரகுவரனை மனதளவில் மிகவும் பாதித்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-208.png?resize=600%2C342&ssl=1)
இந்த சுழலில் 2008 ஆம் ஆண்டு மாரடைப்பால் ரகுவரன் உயிரிழந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-217.png?resize=420%2C385&ssl=1)
மேலும் அதிகப்படியான குடிப்பழக்கம் தான் அவரது இறப்பிற்கு கரணம் என்று சொல்லப்பட்டாலும் மகனை பிரிந்த மன அழுத்தமும் அவரின் இறப்பிற்கு முக்கிய கரணம் என்று கூறப்பட்டது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-215.png?resize=800%2C910&ssl=1)
நடிகர் ரகுவரனின் மகன் ரிஷியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.