மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பூ மலர்வது ,தனது செளந்தர்யத்தை விளம்பரப்படுத்தவல்ல; சுற்றுச் சூழலுக்குச் சுகந்தம் பரப்ப என்று வைரமுத்துவின் டிவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் 3 தொகுப்புகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ’கலைஞர் நூற்றாண்டு நினைவலைகள்’ புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.மேலும் தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பூ மலர்வது ,தனது செளந்தர்யத்தை விளம்பரப்படுத்தவல்ல; சுற்றுச் சூழலுக்குச் சுகந்தம் பரப்ப என்று வைரமுத்துவின் டிவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கலைஞருக்கும்,அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த.. – வைரமுத்து ட்வீட் வைரல்!
இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
ஒரு பூ மலர்வது
தனது செளந்தர்யத்தை
விளம்பரப்படுத்தவல்ல;
சுற்றுச் சூழலுக்குச்
சுகந்தம் பரப்ப
காற்று கைவீசித் திரிவது
தன் இருப்பை
இனங்காட்டவல்ல;
நாசிகளுக்கெல்லாம்
சுவாசம் பரிமாற
மழைத்துளி தரையிறங்குவது
இடிகளின் துரத்தலுக்கு
அஞ்சியல்ல;
பசித்த வேர்களின்
திரவ உணவுக்காக
பூவாய்
காற்றாய்
மழையாய்
இனம் மொழி மீது
இயங்கிய தலைவா
உன் நூற்றாண்டை எடுத்துப்
பல நூற்றாண்டுகள்
உடுத்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.